Latestமலேசியா

தீவிபத்தின்போது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஆடவர் காயம்

கோத்தா கினபாலு, ஏப் 4 – கோத்தா கினபாலுவிற்கு அருகேயுள்ள Kampung Muhibah Baru விலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின்போது கூரை இடிந்து விழுந்ததில் 47 வயதுடைய ஆடவர் ஒருவர் காயம் அடைந்தார். தீயை அணைக்க முயன்றபோது கூரையின் ஒரு பகுதி அந்த ஆடவரின் தோள்பட்டையில் விழுந்தது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். அந்த வீட்டின் மேல் மாடி முற்றாக அழிந்ததாக தீயணைப்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே Putatan மற்றும் Kudat மாவட்டங்களில் இதர இரண்டு வீடுகளும் தீவிபத்திற்கு உள்ளாகின. அந்த இரு சம்பவங்களிலும் எவரும் காயம் அடையவில்லையென அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!