![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-03-at-7.46.22-PM-780x470.jpeg)
கெடா, ஜன 3 – தைப்பூசத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதியை சிறப்பு விடுமுறையாக கெடா அரசு அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த விடுமுறை அங்கீகரிக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி மொஹம்மட் நோர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டும் தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்கியதையும் இந்த ஆண்டு விரைவாக விடுமுறையை அறிவித்துவிட்டதையும் மந்திரி பெசார் சுட்டிக்காட்டினார்.
இந்த விடுமுறையால் இந்து மக்கள் மட்டுமின்றி மற்றவர்களும் விடுமுறையை அனுபவிக்கலாம் என்று சனுசி கூறினார்.