Latestமலேசியா

நஜீப்புக்கு வயிறு சரியில்லை; 1MDB வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற 1MDB வழக்கு விசாரணை, டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் உடல் நலம் குன்றியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது.

அந்த முன்னாள் பிரதமருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, அவர் பலவீனமாக இருப்பதாக, காஜாங் சிறையின் மருத்துவ அதிகாரி நீதிபதியிடம் தெரிவித்தார்.

70 வயது நஜீப்பின் ரத்த அழுத்தமும் குறைவாக இருப்பதாக அவர் சொன்னார்.

எனவே, நஜீப்புக்கு 2 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என அவரின் வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.

ஆனால், இன்று ஒரு நாள் தான்; அதற்கு மேலும் வழக்கை ஒத்தி வைக்க முடியாது என அறிவித்த நீதிபதி, விசாரணை நாளை ஏப்ரல் 3, புதன்கிழமை காலையில் தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.

2.28 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய இந்த 1MDB வழக்கில், டத்தோ ஸ்ரீ நஜீப் மொத்தமாக 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

அவற்றில் 4 அதிகார முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள், எஞ்சிய 21-ரும் பணச்சலவை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!