![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-28-May-2024-01-11-PM-1935.jpg)
கோலாலம்பூர், மே 28 – பங்சரில் உள்ள Putra Ria அடுக்குமாடி குடியிருப்பின் 90 ஆவது எண் கொண்ட Block கிலிருந்து கடை வீதிகளுக்கு பொருட்களை வாங்கிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் டிரோலி எனப்படும் தள்ளு வண்டி கீழே தூக்கி எறியப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் அதிஸ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். எனினும் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சேதம் அடைந்தது. மாலை ஐந்து மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது தாம் வேலையில் இருந்ததாக மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான 50 வயதுடைய Mohd Kusairi Ishak தெரிவித்தார். கடுமையான மழை மற்றும் காற்று வீசுவதற்கு 10 நிமிடங்கு முன்னதாக அந்த சம்பவம் நடந்ததது. வாடிக்கையாளர் ஒருவர் தமது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தமது அங்காடிக் கடையில் Yong Tau fu வாங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என அந்த வர்த்தகர் தம்மிடம் தெரிவித்தாக Kusairi தெரிவித்தார்.
எனது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த பெண்மனி அந்த இடத்தில் காத்திருக்கவில்லை. அவர் மீது விழு வேண்டிய அந்த தள்ளு வண்டி அதிஸ்டவமாக தனது மோட்டார்சைக்கிளில் விழுந்ததாக Mohd Kusairi தெரிவித்தார். நிச்சயமாக அந்த தள்ளுவண்டியை பெரியவர்கள்தான் மேலேயிருந்து கீழே தூக்கி எறிந்திருக்கக்கூடும் . அடுக்குமாடி வீட்டின் 10 ஆவது மாடியிலிருந்து அந்த வண்டி வீசப்பட்டதாக சில குடியிருப்பாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக Kusairi கூறினார்.