![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-29-at-9.34.31-AM.jpeg)
கோலாலம்பூர், பிப் 29 – பண்டார் செராஸ் Kampung Baru Cina வில் நிகழ்ந்த தீவிபத்தில் உணவகம் ஒன்று தீயில் அழிந்தது. நேற்று மாலை மணி 6.02 அளவில் ஏற்பட்ட அந்த தீவிபத்தில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏழு வாகனங்களும் சேதம் அடைந்தன. இரண்டு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். அந்த உணவகம் 80 விழுக்காடு அழிந்தது. இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை என்பதோடு அந்த உணவகத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஒரு விழுக்காடு மற்றும் 10 விழுக்காடுவரை எரிந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டன.