![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-02-Dec-2023-11-37-AM-214.jpg)
கோலாலம்பூர், டிச 2 – இன்று அதிகாலை கம்போங் பந்தாய் டாலாமில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 69 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் துணை இயக்குனர் Jafri Embok Taha தெரிவித்தார்.
அதிகாலை 1.30 மணிக்கு நடத்தப்பட்ட 111 அதிகாரிகளை உட்படுத்திய அந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 110 வெளிநாட்டவர்கள் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 45 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் கூடுதல் நாட்கள் நாட்டில் தங்கியிருந்ததோடு முறையான ஆவணங்களும் வைத்திருத்திருக்காதது தெரியவந்தது என அவர் கூறினார்.
இச்சோதனையின் போது, தன் வீட்டில் சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்க அனுமதித்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டார்.