![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/fire-700x470.jpg)
ஈப்போ, ஜூன் 10 – பேரா, பாகன் செராயில் உள்ள சீன மயானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்ததில் அடையாளம் தெரியாத நபர் உடல் கருகி மாண்டார். இன்று மதியம் மதியம் சுமார் 2.05 மணியளவில் தீ விபத்து குறித்த பேரிடர் அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் பாலினம் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவர் கருகி மாண்டார். புல் வளர்ந்த காலியான கட்டிடத்தின் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் 50 விழுக்காடு எரிந்த நிலையில் காணப்பட்டது.