![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-20-Mar-2024-01-54-PM-2000.jpg)
பாடாங் பெசார், மார்ச் 20 – பெர்லீசிலுள்ள, பாடாங் பெசார் குடிநுழைவு, சுங்கத் துறை, தனிமைப்படுத்தும் சோதனை சாவடியை, நள்ளிரவு மணி 12 வரை திறந்திருக்கும் பரிந்துரையை, பெர்லீஸ் மாநில அரசாங்கம், உள்துறை அமைச்சிடம் முன் வைக்கும்.
தற்சமயம், அந்த நாட்டின் எல்லைக் கதவு இரவு மணி பத்து வரையில் மட்டுமே செயல்படுகிறது.
அது தொடர்பான பரிந்துரை அடங்கிய அறிக்கை, உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமென, பெர்லீஸ் எல்லை ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு செயற்குழு தலைவர் இசிசாம் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதே சமயம், மலேசியா – தாய்லாந்து எல்லையிலுள்ள, வாங் கெலியான் ICQS நுழைவாயில் திறந்திருக்கும் நேரத்தை இரவு மணி எட்டு வரை நீட்டிகும் பரிந்துரையும் முன் வைக்கப்படுமென இசிசாம் சொன்னார்.
தற்சயம், அந்த நுழைவாயில் இரவு மாலை மணி ஏழு வரையில் மட்டுமே செயல்படுகிறது.
பெர்லீஸ் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுலாத் துறையையும் உந்தச் செய்யும் நோக்கில், அவ்விரு பரிந்துரைகளும் முன் வைக்கப்படவுள்ளன.