Latestமலேசியா

பினாங்கில், பாராங் கத்தி, உருட்டு கட்டையுடன் சண்டையிட்டுக் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களின் காணொளி வைரல் ; 58 வயது நபர் கைது

ஜோர்ஜ் டவுன், ஜூன் 5 – பினாங்கு, ஜோர்ஜ் டவுன், ஜாலான் பேராக்கிலுள்ள, வீடமைப்பு பகுதி ஒன்றில், இருவர் கையில் பாராங் கத்தி மற்றும் உருட்டு கட்டையுடன் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் தொடர்பில், புகார்கள் பெறப்பட்டுள்ளதை மாநில போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று காலை மணி 11.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றும், சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதனால், அச்சம்பவம் தொடர்பில், போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதாக, தீமோர் லாவுட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஷ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

அச்சம்பவம் தொடர்பில், இதுவரை இரு தரப்பினரும் புகார் செய்துள்ள வேளை ; 55 வயது ஆடவர் ஒருவர் கைதுச் செய்யபட்டுள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, கையில் பாராங் கத்தியுடன் வீட்டொன்றிற்கு செல்லும் ஆடவர் ஒருவரை, அவ்வீட்டிலிருந்து உருட்டு கட்டையுடன் வரும் மற்றொரு ஆடவர் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று வைரலானது.

இ-ஹெய்லிங் வாகனம் ஒன்று, அவ்வீட்டின் வழியை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட அதிருப்தி, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!