![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-18-Mar-2024-09-36-AM-5444.jpg)
அம்பாங், மார்ச் 18 – சிலாங்கூர், புக்கிட் அம்பாங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பலொன்று சாலையிலேயே அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அச்சம்பவத்தின் வீடியோ மார்ச் 12-ஆம் தேதியே வைரலாகிய போதிலும், இதுவரை அது குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை.
எனவே, அச்சண்டையில் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாக முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கேட்டுக் கொண்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்களும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக வைரலான அந்த 14 வினாடி வீடியோவில், Mat Rempit கும்பலொன்று ஓர் ஆடவரைச் சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.
சண்டையின் போது சாலையில் விழுந்தவரை, அக்கும்பல் எட்டி உதைத்தது மட்டுமல்லாமல், தலைக் கவச தொப்பிகளைக் கொண்டும் தாக்கியது.
அடி வாங்கிய நபர் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தப்பியோடுவதோடு அவ்வீடியோ முடிகிறது.