Latestஉலகம்

கட்டார் வருகையினால் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஏற்றுமதி பெறப்பட்டுள்ளது – தெங்கு ஷப்ருல் தகவல்

டோஹா, மே 14 – பிரதமர்   டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்டாருக்கு மேற்கொண்ட    அதிகாரப்பூர்வ பயணத்தின்  மூலம்  700  மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய  தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவைக்கான  சாத்தியமான ஏற்றுமதியை   மலேசியா பெற்றுள்ளதாக அனைத்துலக    வாணிக தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul  Aziz தெரிவித்தார். நேற்றிரவு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன்    மலேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்  கலந்துகொண்ட  இரவு விருந்து  நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர்   இத்தகவலை வெளியிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன்,  Qatar வாணிக தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட  வட்ட மேஜை மாநாட்டில்  ஏற்றுமதிக்கான    இணக்கம் காணப்பட்டதாக  Tengku Zafrul    தெரிவித்தார்.  பிரதமர்  அன்வார் இப்ராஹிம் ஏற்பாடு செய்த இரவு விருந்தில்   சுமார்   500 மலேசியர்கள்  கலந்துகொண்டனர்.  நமது தயாரிப்பு மற்றும் சேவைகளில்  Qatar நிறுவனங்கள் வைத்திருக்கும்    நம்பிக்கை மற்றும் கடப்பாட்டினால் பெரிய அளவிலான ஏற்றுமதியை நாம் பெற்றுள்ளோம் என  Tengku  Zafrul தெரிவித்தார்.  இது தவிர  மேற்காசியாவின்  சந்தைகளை மலேசியா அதிக  அளவில் ஊடுருவ முடியும்  என்றும்   அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!