![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-01-at-9.29.13-AM.jpeg)
கோலாலம்பூர், ஜன 1 – இன்று புத்தாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வருகின்றனர். கோலாலம்பூர் ஜாலான் புடுவிலுள்ள கோர்ட்டுமலை கணேசர் ஆலயம், பத்துமலை திருத்தலத்திலுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் உட்பட கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, ஈப்போ, பினாங்கு , சுங்கைப்பட்டாணி உட்பட பல ஆலயங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டு பூஜைகளில் சிறுவர் முதல் குடும்பம் குடும்பமாக பலர் கலந்து கொண்டதோடு இறைவழிபாட்டுக்குப் பின் அவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியாக பரிமாறிக் கொண்டனர்.
ஆலயங்களில் சிறப்பு பூஜைக்குப் பின் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனிடேயே பல ஆலயங்களில் இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவாலயங்களிலும் நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இந்த வேளையில் வணக்கம் மலேசியா இணையத்தளமும் அனைத்து மலேசியர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.