Latestஉலகம்

பெண்ணின் கண்களிலிருந்து 60 புழுக்களை அகற்றிய சீன மருத்துவர்கள்

சீனா, டிச 11: சீனாவில் பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு புழு வெளியே விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவர்களை நாடியுள்ளார்.

அந்த பெண்ணை சோதனை செய்ததில் இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருந்துவர்கள்.

உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது கண்களிலிருந்து 60க்கும் மேற்பட்ட புழுக்களை அகற்றப்பட்டன.

பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா (Filarioidea) வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருந்துவர்கள் நம்புகிறார்கள். எனினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்துதான் புழுக்கள் தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருத்துரைத்துள்ளார்.

இதனிடையே கண்களைத் தொடுவதற்கு முன் கை சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுமாறு அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!