Latestமலேசியா

பொந்தியானில் கடை வீட்டில் ஏற்பட்ட தீ; உடல் கருகி மாண்ட ஆடவரின் சடலம் மீட்பு

பொந்தியான், மே-13, ஜொகூர் பொந்தியான், தாமான் முத்தியாராவில் உள்ள கடை வீட்டொன்றில் நேற்று ஏற்பட்ட தீயில், ஆடவர் ஒருவர் உடல் கருகி மாண்டார்.

தலா 3.5 சதுர மீட்டர் அளவில் ஆறு வாடகை அறைகளாக மாற்றியமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியில் நண்பகல் வாக்கில் தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அங்கு சமையலறைக்கு அருகே இருந்த அறையில் அவ்வாடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் வயதோ அடையாளங்களோ இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

மூன்று தீயணைப்பு வண்டிகளில் வந்த 19 பேர் கொண்ட குழு, தீயை முற்றாக அணைத்து அச்சடலத்தை மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்தது.

அக்கடை வீடு கிட்டத்தட்ட 60 விழுக்காடு தீயில் சேதமடைந்த நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

மொத்த சேத விவரங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!