![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/dt.png)
குவந்தான், மே 25 – தனது கணவருக்கும் , மாமியாருக்கும் விஷம் கொடுக்க முயன்றதாக போலீஸ் அதிகாரியின் மனைவியான டத்தோ பிரமுகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களுக்கு காயம் விளைவிக்கும் நோக்கத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் புரிந்ததாக 42 வயதுடைய Datuk Mou Ei Leen என்ற Eileen Mou மீது நீதிபதி Azmabn Mustapha முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், குவந்தானில் Lorong Seri Kuantan னில் தனது கணவருக்கு விஷம் கொடுத்ததாக டத்தோ Mou Ei Leen மீது முதல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மேலும் 2020 ஆம் ஆண்டு Lorong Seri Kuantan னிலுள்ள nursing home மில் 59 வயதுடைய தனது மாமியருக்கும் விஷம் கொடுக்க முயன்றதாக Mou Ei leen மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் தண்டனை சட்டத்தின் 328 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அவருக்கு 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.