Latestமலேசியா

போஸ் அஸ்லினா கப்பல் கவிழ்ந்ததில் 8 ஊழியர்கள் மீட்கப்பட்டனர்

பிந்துலு, பிப் 17 – பிந்துலு குவாலா கெமெனா கடலின் வடமேற்கே 9 கடல் மைலுக்கு அப்பால் போஸ் அஸ்லினா கப்பல் கவிழ்ந்ததில் அதிலிருந்து 8 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். அந்த கப்பலின் ஊழியர்கள் மற்றும் அதன் கேப்டன் ஆகிய அனைவரும் 31 மற்றும் 48 வயதுக்குட்பட்ட இந்தோனேசியர்கள் என மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் பிந்துலு மண்டல இயக்குனர் கேப்டன் முகமட் இசுவாடி முஹமட் ஹசன் தெரிவித்தார். அந்த கப்பலிருந்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போட் கிலாட் 44 ரோந்து படகு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

போஸ் அஸ்லினா கப்பலின் ஊழியர்கள் அனைவருடன் அக்கப்பலின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி மூழ்கியதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். அக்கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களும் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அக்கப்பல் முழுமையாக மூழ்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!