![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-12-Mar-2024-04-01-PM-3701-1.jpg)
மஞ்சோங், மார்ச் 12 – பேராக், மஞ்சோங்கில், சொந்த அண்ணனையும், அண்ணியையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக, முதியவர் ஒருவருக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
63 வயது சீ கூய் ஹெங் எனும் நபர் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் ஐந்தாம் தேதி, மாலை மணி மூன்றுக்கும், 3.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில், பந்தாய் ரெமிசுக்கு அருகில், பெங்காலான் பாருவிலுள்ள, செம்பனை தோட்டம் ஒன்றில், அவன் அக்குற்றத்தை புரிந்ததாக நம்பப்படுகிறது.
சொத்து தகராறை தொடர்ந்து மூண்ட சண்டையில், 70 மற்றும் 74 வயதுடைய அவ்விருவரும் வெட்டிக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.