Latestமலேசியா

மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாட்டை உயர்த்தும் எண்ணம் இல்லை: அந்தோனி லோக்

கோலாலம்பூர், மார்ச் 19 – சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

எனவே நடப்பில் மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ள வேகக் கட்டுப்பாடு இனியும் தொடரும் என போக்குரவத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

உண்மையில் வேகக் கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுப் பணித் துறை அமைச்சின் கீழ் வருகிறது என அவர் மக்களவையில் கூறினார்.

சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு 120 கிலோ மீட்டராக அதிகரிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு உள்ளதா என, மக்களவை கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அந்தோணி லோக் அவ்வாறு பதிலளித்தார்.

இவ்வேளையில், கடந்தாண்டு மட்டும் நாடும் முழுவதும் வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக வாகனமோட்டிகளுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 55 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

பேராக், PLUS-Behrang நெடுஞ்சாலையின் 382.8-வது கிலோ மீட்டரில் தான் ஆக அதிகமாக வேகக் கட்டுப்பாடு மீறல்கள் பதிவானதாக அவர் சொன்னார்.

அங்கு மட்டுமே 98,911 சம்மன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!