Latestஉலகம்

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக விளக்கு மாட்டிய போது மின்சாரம் தாக்கி கணவர் பலி

சென்னை, ஜூன்-7 – தமிழகத்தின் சென்னை, மேற்கு மாம்பலத்தில் மனைவியின் 25-வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த கணவர், விழா ஏற்பாட்டின் போது துரதிஷ்டவசமாக உயிர் இழந்து குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி Augustine Paul பரிதாபமாக உயிரிழந்தார்.

அதுவும் மனைவியின் கண்முன்னே அவரின் உயிர் பிரிந்தது, பிறந்தநாள் கொண்டாட்ட குதூகலத்தில் இருந்த குடும்பத்துகே பேரிடிடாக அமைந்துள்ளது.

இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், மனைவி மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் Agustine பிறந்தநாளுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்தார்.

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணியிருந்த கணவரின் உயிருக்கு, மின்சாரம் எமனாக முடிந்திருப்பது இரு வீட்டார் மட்டுமின்றி அப்பகுதி மக்களையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனைவியர் மேல் அதிகம் பாசம் வைக்கும் கணவர்கள் கிடைப்பதே அரிது; அதிலும் இவர் இத்தனை சீக்கிரத்தில் விடைப் பெற்று விட்டாரே என நெட்டிசங்களும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!