![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-05-46-PM-6316.jpg)
மலாக்கா, ஜூன் 6 – மலாக்காவில், முதியவர் ஒருவர் செலுத்திய புரோடுவா மைவி ரக கார் ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து, ஜாலான் தாமான் கெனங்கா மேவா சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு வாகனங்களை மோதித் தள்ளியது.
நள்ளிரவு மணி 12.20 வாக்கில், அந்த 80 வயது முதியவர் தனது காரை சாலையோரத்தில் நிறுத்த முற்பட்ட போது, அவ்விபத்து நிகழ்ந்ததாக, மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் கிறிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.
எனினும், பிரேகிற்கு பதிலாக எண்ணெய்யை அழுத்தியதால், அக்கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதர வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது.
அவ்விபத்தில், எழு வாகனங்கள் சேதமடைந்தன.
அவ்விபத்து தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளை ; வாகனத்தை கட்டுப்படுத்த தவறிய குற்றத்திற்காக, 1959-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் முதியவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.