![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-01-30-PM-9893.jpg)
மலாக்கா, பிப்ரவரி 12 – மலாக்கா, ஜாலான் கெலேபாங் பெசாரில், மோட்டார் சைக்கிள் ஒன்று காரை மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை மணி 2.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
பலத்த காயம் காரணமாக, மஜ்திட் தானாவிலுள்ள, ரஹ்மாட் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த, 17 வயது முஹமட் பைசால் யாஹ்யா எனும் மாணவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த எதிர்சாலையில் வந்து கொண்டிருந்த காரை மோதி விபத்துக்குள்ளானது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் கிறிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.