
வாஷிங்டன், மே-29 – ஹாவர்ட் பல்கலைக்கழகம் தனது வெளிநாட்டு மாணவர் விகிதத்தை அதிகபட்சமாக 15 விழுக்காடாக மட்டுமே நிர்ணயிக்க வேண்டும்.
நடப்பில் உள்ளது போல் 31 விழுக்காடு அல்ல; அது மிகவும் அதிகமென அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெளிநாட்டு மாணவர்களின் படையெடுப்பால் உள்நாட்டு மாணவர்களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை.
ஆகவே, ஹாவர்ட் பல்கலைக்கழகம் தனது ‘பழையைப் பெருமையை’ மீண்டும் நிலைநாட்ட வேண்டுமென்றால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டுமென்றார் அவர்.
கடந்த மாதம் ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை டிரம்ப் நிர்வாகம் முடக்கி வைத்தது.
இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க கடந்த வாரம் ஹாவர்ட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.
யூத எதிர்ப்புச் சம்பவங்களைக் கையாளுமாறு அரசு விதித்த உத்தரவைப் பின்பற்றத் தவறியது மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலைப் பகிரத் தவறியதற்காக ஹாவர்ட் மீது டிரம்ப் நிர்வாகம் இந்த அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.