![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-11-Mar-2024-05-59-PM-3764.jpg)
கோலாலம்பூர், மார்ச் 11 – மாமாக் கடை ஒன்றில் வழங்கப்பட்ட மைலோ பானத்தில் காண்ணாடித் துண்டுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்த 26 வினாடி காணொளியில் ஆடவர் ஒருவர், முன்னதாக மைலோ பானம் நிரப்பப்பட்ட கண்ணாடி கோப்பையிலிருந்து காண்ணாடித் துண்டுகளை ஒவ்வொன்றாக வெளியேற்றுவதை காணமுடிகின்றது.
அந்த கண்ணாடி துண்டுகளை திசுக்களின் மேல் அடிக்கிய படப்பிடிப்பும், கடையின் ரசீதும் தற்போது மிகவும் வைரலாகப் பரவி 200,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இதனிடையே இந்த சம்பவம், சம்பந்தப்பட்ட உணவகத்தில் உள்ள உணவின் பாதுகாப்பு குறித்த கேள்வியை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் உள்ள உணவுகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.