![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/2725189-780x470.webp)
கோலாலம்பூர் , மே 31 – ஜோகூர் ரீஜெண்ட் அல்லது இடைக்கால சுல்தானின் போலீஸ் மெய்க்காவலர் குழுவின் அதிகாரி e-hailing வாடகை கார் ஓட்டுனரை தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பல்வேறு அதிகாரிகள் விசாரணைக்கு உதவுவதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என போலீஸ் படைத் தலைவர் Razarudin Husain இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நியாயமான விசாரணைகள் நடைபெறுவதோடு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குமூலத்தை வழங்குவதையும் இது உறுதிப்படுத்தும். சட்டத்திலிருந்து எந்த குற்றவாளியும் தப்பாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு விசாரணைக்கும் முன்னுரிமை வழங்கப்படும். குற்றம் புரிந்துள்ளதாக கண்டறியப்படும் எந்தவொரு அதிகாரி மீதும் இணக்கப் போக்கு காட்டப்படாது என்றும் என Razarudin கூறினார்.