Latestமலேசியா

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, ‘ஒரு முறை மானியத்தை’ வழங்கும் பரிந்துரை

கோலாலம்பூர், பிப்ரவரி 28 – நாட்டில் மின்சார வாகன தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில், “ஒரு முறை மானியம்” வழங்கும் திட்டத்தை, முதலீடு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

அந்த பரிந்துரை, தேசிய EV ஓட்டுனர் செயற்குழு கூட்டத்தின் போது, நிதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக, முதலீடு வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணையமைச்சர் லியூ சின் டோங் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

இந்த ஒரு முறை மானுயத் திட்டத்தின் வாயிலாக, மக்கள் எரிபொருள் வாகனங்களை பயன்படுத்துவதை விடுத்து, மின்சார வாகனங்களுக்கு மாற ஊக்குவிப்பாக அமையுமென துணையமைச்சர் சொன்னார்.

அதோடு, நீண்ட கால அடிப்படையில், பெட்ரோல் உதவித் தொகையையும் அதன் வாயிலாக குறைக்க முடியும்.

அதனால், அந்த பரிந்துரையை நிதி அமைச்சு ஆராய்ந்து வருவதாக லியூ சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!