Latestமலேசியா

மூன்றாவது தவணையாக வெற்றி பெற்றிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன் 5 – தொடர்ந்து மூன்றாவது தவணையாக வெற்றி வாகை சூடியிருக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவில், உண்மையில் ஜனநாயகம், மிகவும் அற்புதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏப்ரல் 19-ஆம் தேதி முதல், 64 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றுப்பூர்வ மறுசீரமைப்புக்கு மோடி வழிவகுத்துள்ளார். அது இந்தியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக அமைந்துள்ளது என, தமது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடன் இணைந்து பணியாற்ற தாம் காத்திருப்பதாகவும், அது மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருவழி உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அன்வார் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!