![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-05-10-PM-60.jpg)
கோலாலம்பூர், ஜூன் 5 – தொடர்ந்து மூன்றாவது தவணையாக வெற்றி வாகை சூடியிருக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியாவில், உண்மையில் ஜனநாயகம், மிகவும் அற்புதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 19-ஆம் தேதி முதல், 64 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றியுள்ளனர்.
இந்தியப் பொருளாதாரத்தின் வரலாற்றுப்பூர்வ மறுசீரமைப்புக்கு மோடி வழிவகுத்துள்ளார். அது இந்தியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக அமைந்துள்ளது என, தமது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மோடியுடன் இணைந்து பணியாற்ற தாம் காத்திருப்பதாகவும், அது மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருவழி உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அன்வார் கூறியுள்ளார்.