![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-29-Feb-2024-12-17-PM-2964.jpg)
சென்னை, பிப் 29 – Rajiv Gandhi கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்த விடுதலையான Santhan சென்னை மருத்துவமனையில் நேற்று இறந்தார். 55 வயதுடைய அவர் கல்லீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தபோது மரணம் அடைந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட Santhan
என்ற Suthenthiraraja வுக்கு தூக்குத் தண்டனை நீண்ட காலமாக நிறைற்றப்படாத நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரையும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி,முருகன், Jayakumar, Robert Payas, Ravichandran ஆகியோரை இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையைச் சேர்ந்த Santhan திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னையில் Rajiv Gandhi மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.