Latestமலேசியா

வீட்டிற்கு அருகேயுள்ள நீர்தேக்கத்தில் 9 வயது சிறுவன் மூழ்கி இறந்தான்

கோலாலம்பூர், நவ 29 – கோத்தா பாரு, கம்போங் டெர்டாபில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள நீர் தேக்கப் பகுதியில் விழுந்த 9 வயது சிறுவன் இறந்தான். அந்த சிறுவன் காணவில்லை என தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். நேற்று மாலை மணி 6.53 அளவில் முகமட் ரிஃப்கி அசிரஃப் முகமட் ரெடுவான் என்ற அந்த சிறுவனை தேடிய பின் அவனது உடல் அங்கிருந்த நீர்த் தேக்கத்தில் மீட்கப்பட்டது. அச்சிறுவன் சுவாசிப்பதற்கு உடனடியாக முதலுதவி வழங்கிய தீயணைப்பு வீரர்கள் அவனை உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும் அந்த சிறுவன் இரவு ஏழு மணியளவில் இறந்ததை சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!