![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-27-Nov-2023-10-42-AM-4796.jpg)
ஜொகூர் பாரு, நவ 27 – ஸ்கூடாய் தொழிற்சாலையிருந்து வெளியேறிபோது தொழிற்சாலை உரிமையாளருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர். அந்த உரிமையாளர் தமது தொழிற்சாலையிலிருந்து வெளியேறுவதற்கு போலீஸ் வாகனம் ஒன்று பாதுகாப்புக்கு உடன் சென்றது என டிக் டொக்கில் வெளியான வைரல் காணொளியை ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் மறுத்தார். நேற்று நண்பல் மணி 12.30 அளவில் அந்த தொழிற்சாலையின் முன் சில தனிப்பட்ட நபர்கள் தகராறில் ஈடுபட்டதாக தங்களது விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
பொது ஒழுங்கிற்கு மிரட்டல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாமெனகமாருல் ஜமான் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். தகராறுக்குபின் கம்போடிய பெண்ணான தொழிற்சாலை உரிமையாளர் அங்கிருந்து வெளியேறுவதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கியது தொடர்பில் டிக் டொக்கில் வெளியான காணொளியில் தனிப்பட்ட நபர் ஒருவர் கேள்ளி எழுப்பினார்.