கோலாலம்பூர், மார்ச் 10 – ஸ்ரீ பெட்டாலிங்கிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் தொப்புள் கொடியுடன் பிறந்த ஆண் சிசுவின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கீழே விழுந்ததன் விளைவாக அல்லது உயரமான இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால் அந்த குழந்தைக்கு மண்டை உடைந்துள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த அந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தந்ததாக அவர் கூறினார். அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது இதில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.