கோலாலம்பூர், பிப் 9 – அமான் பாலஸ்தீன் இயக்கத்தின் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு பென்சீர் பேகம் அகமட் பஷீர் என்ற பெண்மணியை MACC தேடி வருகிறது. தாவுபான் ஓப்ஸ் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சட்டவிரோத பண பரிமாற்ற பிரிவு பென்சீரை தேடி வருவதாக எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது.
அரசு சார்பற்ற இயக்கமான அமான் பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் பென்சீரை தாங்கள் தேடி வருவதாக எம்.ஏ.சி.சி தெரிவித்திருக்கிறது. சிலாங்கூர், காஜாங் தமன் செரி டமாயை சேர்ந்தவரான 42 வயதுடைய பென்சீரை அறிந்த பொதுமக்கள் தங்களுடன் தொடர்பு கொள்ளும்படி எம்.ஏ.சி.சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது