Latestஉலகம்

அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு முன் குடியேறிய இந்திய மாணவர்களில் இருவர் இறந்து கிடந்தனர்

ஹைதரபாத், ஜன 16 – 2 வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய இரண்டு இந்திய மாணவர்கள் கனெக்டிகட் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தனர். தெலுங்கானா வாநர்பதியைச் சேர்ந்த 22 வயதுடைய தினேஷ் மற்றும் ஆந்திர பிரதேசம்
ஸ்ரீகுளம்மைச் சேர்ந்த 21 வயதுடைய நிகேஷ் ஆகியோர் இறந்து கிடந்ததாக அடையாளம் தெரிவிக்கப்பட்டது. நிகேஷ்சின் மரணத்திற்காக காரணம் குறித்து ஆந்திராவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அறையில் தங்கியிருந்தவர்களும் எதுவும் தெரியவில்லை. சனிக்கிழமையன்று இரவு Dinesh தங்கியிருக்கும் அறைக்கு அருகே இருந்த அவரது நண்பர்கள் அழைக்கப்பட்டு அவரது மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் தங்களுக்கு எதுவும் தெரியவில்லையென Dinesh சின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி கனெக்டிகட்டிலுள்ள ஹாட்போர்ட்டிற்கு சென்றதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். சில நாட்களுக்கு பின் அவரது நண்பர்நிகேஷ்சும் அங்கு சென்றதாக கூறப்பட்டது. அந்த இருவரும் பரஸ்பர நண்பர்கள் என்பதோடு அமெரிக்க சென்ற பின் அவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்ததாக கூறப்பட்டது. Dinesh சின் உடலை கொண்டுவருவதற்கு இந்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந் ரெட்டி யின் உதவியை நாடியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!