Latestமலேசியா

அமெரிக்க தூதரகத்தில் மகஜர் சமர்பித்தபோது; ஆடவர் கைது

கோலாலம்பூர், பிப் 25 – அமெரிக்க தூதரகத்திற்கு முன் மகஜர் சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை வங்சா மஜு ஒ.சி.பி.டி ஆஷாரி அபு சமாஹ் உறுதிப்படுத்தினார். போலீஸ் உத்தரவை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக பாலஸ்தீன் நெருக்கடியில் போர் நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்து ‘Gegar Amerika’ இயக்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அமெரிக்க தூதரகத்தில் மகஜர் சமர்ப்பித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை மலேசிய சோசலீஸ் கட்சி தனது முகநூலில் பதிவிட்டிருந்தது. அமெரிக்க தூதரகத்திற்கு அருகே பி.எஸ்.எம் கட்சியின் தொண்டரான ஹர்மித் சிங் இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டார் என பி.எஸ்.எம் தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!