Latestமலேசியா

அம்பாங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கால்வாயில் விழுந்த சிறுவன் மீட்பு

கோலாலம்பூர், ஏப் 21- அம்பாங் , Bukit Antarabangsaவில் River Dale அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கால்வாயில் விழுந்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். நேற்றிரவு இரவு 8.34 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து Pandan Indah தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அச்சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அறுவர் கொண்ட மீட்புக் குழுவினர் 4.57 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் தலையில் காயத்துடன் காணப்பட்ட அச்சிறுவனை பாதுகாப்புடன் மீட்டு சிகிச்சை மற்றும் மேல் நடவடிக்கைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!