கோலாலம்பூர், ஏப் 7 – “அல்லா” காலுறைகள் விவகாரத்தில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலேவை நிந்தனை சட்டத்திற்கு பதில் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டும்படி பாசிர் கூடாங் P.K.R நாடாளுமன்ற உறுப்பினர் ரஸாருதீன் உசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் அக்மல் சலேவை குற்றஞ்சாட்டுவதே பொருத்தமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார். அதே வேளையில் நிந்தனை சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டால் அவரது வழக்கறிஞர் குழுவில் இடம்பெறுவதற்கு தாம் விரும்புவதாகவும் ஹசன் கரீம் தெரிவித்திருக்கிறார்.
காலுறைகள் விவகாரத்தில் K.K Mart வர்த்தக மையங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற Akmal லின் உரையில் சில தரப்பினருக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பேச்சுரிமைக்கு அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பு வழங்குதாக Hassam கூறினார். நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டின் பலலூடக தொடர்பு சட்டத்தின்கீழ் அக்மல் சலேக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக இதற்கு முன் போலீஸ் படையின் தலைவர் ரஸாருதீன் உசேன் கூறியிருந்தார்.