கோலாலம்பூர், நவ 24 – சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மலேசியாவின் ஸ்குவாஸ் வீராங்களை S.சிவசங்கரி தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு நிதித்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரிங்கிட் வெகுமதியை பெற்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் புதிய சாதனை ஏற்படுத்தியதற்காக நூர் சைப்பூல் ஸுல்கிபிலி 110 ,000 ரிங்கிட் வெகுமதியை பெற்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு 32 லட்சம் ரிங்கிட்டும், பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் விளையாட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 32 லட்சம் ரிங்கிட் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட 66 விளையாட்டாளர்களும் பாரா ஆசிய போட்டியில் கலந்துகொண்ட 37 மாற்று திறனாளிகளுக்கும் அந்த ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொண்டனர்.