Latestமலேசியா

ஆதரவற்ற சிறார்களுடன் மஹாஸ் மாவு மில் நிறுவனத்தின் ஒளி வீசும் தீபாவளி கொண்டாட்டம்

கோலாலம்பூர், நவ 11 – ஆதரவற்ற சிறார்களும் தீபத் திருநாளை குதூகலத்துடன் கொண்டாடும் நோக்கில் மஹாஸ் மாவு மில் (ம) நிறுவனம் ஒளி வீசும் தீபாவளி நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தது. மஹாஸ் நிறுவனத்தின் சமூக சேவை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்நிகழ்வு அமைவதாக அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ஆர். சுப்ரமணியம் தெரிவித்தார்.

பல இனங்களையும் கொண்ட மலேசிய மக்களின் ஐக்கியத்தை பிரதிபலிக்கும் பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது . தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் ஆதரவற்ற , நலிவுற்ற மக்களையும் நாம் மறந்துவிடக்கூடாது. இத்தகையோருக்கு உதவிடும் நோக்கத்தில்தான் மஹாஸ் நிறுவனம் ஒளி வீசும் தீபாவளி நிகழ்வினை ஆண்டுதோறும் நடத்தி வருவதாக அவர் கூறினார்.

தீபாவளி பெருநாளில் மட்டுமின்றி, ஹரிராயா, கிறிஸ்துமஸ் போன்ற பெருநாட்களிலும் கோவிட் -19 தொற்று மற்றும் வெள்ள பேரிடரின்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஹாஸ் நிறுவனம் உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது என டத்தோ சுப்ரமணியம் தெரிவித்தார்.

மலாக்கா மெர்லிமாவில் இயங்கிவரும் மஹாஸ் நிறுனம் மிளகாய் தூள், சமையலுக்கு பயன்படுத்தும் மசாலைத்தூள் , பலகார மாவுகள் என பல்வேறு தரமிக்க பொருட்களை தயாரித்து வருகின்றது.

1981ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் வற்றாத ஆதரவு மற்றும் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தின் வாயிலாக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தம் வெளியீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

மஹாஸ் நிறுவனத்தின் பொருட்களைப் பற்றிய மேல் விபரங்களுக்கு
www.mahas .com.my அகப்பக்கம் அல்லது 011-55579185 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!