
கோலாலம்பூர், ஜூன் 9 – முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC- யின் தலைவர் அசாம் பாக்கி (Azam Baki), தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் (Albert Tei) மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் அவதூறானவை எனக் கூறி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சபா ஊழல் விவகாரம் தொடர்பாக தன்னை அசாம் பாக்கி மிரட்டியதாக ஆல்பர்ட் தேய் முன்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை அசாம் பாக்கி மறுத்ததுடன், தேயை ஒருபோதும் சந்தித்ததோ அல்லது அவருடன் தொடர்பு கொண்டதோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இழப்பீடும் நிரந்தர தடை உத்தரவும் கோரப்பட்டுள்ளதுடன், தேயின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



