கோத்தா பாரு, ஜனவரி 3 – கிளந்தான், பெங்காலான் செப்பாவிலுள்ள, கடை வரிசைக்கு அருகில், இருதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, ஆடவர் ஒருவர் காரில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
முன்னதாக, தோயோத்தா வியோஸ் ரக காரில் சுயநினைவு இன்றி காணப்பட்ட அந்த 45 வயது ஆடவர் உயிரிழந்து விட்டது, இரவு மணி 10.30 வாக்கில் உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 10.17 வாக்கில் போலீசுக்கு தகவல் கிடைத்ததாக, கோத்தா பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன் கனிஸ்னர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.
சவப்பரிசோதனை வாயிலாக, இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, ரோஸ்டி சொன்னார்.
எனவே, அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.