Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில், நோய்வாய்பட்டிருப்பதாக கூறி, மருத்துவ விடுப்பில் சென்ற பெண் ; விமானத்தில் முதலாளியை கண்டு அதிர்ச்சி

புது டெல்லி, ஜூலை 8 – இந்தியாவில், விடுமுறைக்கு செல்ல, நோய்வாய்பட்டிருப்பதாக பொய் சொல்லி, மருத்துவ விடுப்பில் சென்ற பெண் ஒருவர், தாம் பயணம் செய்த அதே விமானத்தில், தனது முதலாளியை காண நேர்ந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

23 வயது கிரேஸ் (Grace) எனும் அப்பெண், தமக்கு நேர்ந்த அந்த மோசமான அனுபவத்தை, @grachevaaleidya எனும் தமது டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

“வேலை செய்ய வேண்டாம் என எண்ணி பொய் மருத்துவ விடுப்பில் சென்ற நான், இறுதியில் எனது முதலாளியிடமே சிக்கிக் கொண்டேன்” என கிரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில், அவரது முதலாளி அனுப்பிய குறுச்செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டும், பின்னாள் இருந்து அப்பெண்ணை காட்டும் புகைப்படம் ஒன்றும், அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவை இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

“நானாக இருந்திருந்தால் அழுதிருப்பேன். உடனடியாக எனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்திருப்பேன்” என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ள வேளை ;

“அவருக்கு தேவையான மருந்தை பெற, விமானத்தில் ஏற வேண்டியிருந்திருக்கிறது” என மற்றொருவர் கேலியாக பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!