Latestஇந்தியாஉலகம்

இந்துப் பெருங்கடலில் வங்காள தேச சரக்குக் கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிப்பு

டாக்கா, மார்ச்-13, வங்காள தேச சரக்குக் கப்பலொன்றை இந்துப் பெருங்கடலில் வைத்து கனரக ஆயுதமேந்தியக் கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்துள்ளனர்.

கப்பல் பணியாளர்கள் 23 பேரையும் அவர்கள் பிணைப் பிடித்து வைத்திருப்பதாக, அந்நாட்டு கப்பல் போக்குவரத்துத் துறை கூறியது.

கடற்கொள்ளையர்கள் சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

MV Abdullah எனும் அந்த சரக்குக் கப்பல், சம்பவத்தின் போது மொசாம்பிக் நாட்டு துறைமுகத்தில் இருந்து நிலக் கரிகளை ஏற்றிக் கொண்டு, ஐக்கிய அரபு சிற்றரசுக்கு சென்றுக் கொண்டிருந்தது.

பிணையாளிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்த வங்கதேச அரசாங்கம், அவர்களை பாதுகாப்புடன் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தங்களால் ஆன அனைத்து அரசு தந்திர வழிகளிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அது கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!