கோலாலம்பூர், டிச 31 – இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவில் இன்று அதிகாலை மணி 1.16 அளவில் Richter கருவியில் 6.4 அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது. இந்தோனேசியாவின் ஜெயபுராவிலிருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் 76 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் மலேசியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அந்த நிலநடுக்கம் தொடர்பான ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் வெளியிடவில்லை.