Latestஉலகம்

இந்தோனேசியா தென் சுலெவெசியில் பெண்ணை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம்

ஜகார்த்தா , ஜூலை 4 – இந்தோனேசியாவில் தென் சுலெவெசியில் Luwu மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆறு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பெண் ஒருவரை விழுங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

30 வயதுடைய சுரியாத்தி (Suriaty) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த பெண் உடல் நலமில்லாத தனது பிள்ளைக்காக Siteba கிராமத்திலுள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு மருந்து வாங்குவதற்கு சாலையில் நடந்து சென்றபோது மலப்பாம்பு விழுங்கியதாக அறிவிக்கப்பட்டது.

காணாமல்போன சுரியாத்தி நடந்த சென்ற பாதையில் அவரது சகோதரர் தேடிச் சென்றபோது வழியில் அவரது பாதச் சுவடுகள் காணப்பட்டதோடு செருப்பு, பேக் மற்றும் காற்சட்டையும் தெருவோரம் கிடந்ததோடு அருகே மலைப்பாம்பையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து சுரியாத்தியின் கணவரும் பொதுமக்களும் அந்த மலைம்பாம்பை கண்டுப்பிடித்து கொன்றனர். குடும்ப தலைவியான சுரியாத்தி ஐந்து சிறார்களுக்கு தாய் என்றும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!