Latestமலேசியா

இன்று முதல் செவ்வாய்வரை திரெங்கானு, கிளந்தான் பகாங்கில் கடும் மழை பெய்யும்

கோலாலம்பூர், டிச 24 – திரெங்கானு, கிளந்தான் மற்றும் பஹாங்கில் கிறிஸ்துமஸ் தினம் வரை கடுமையான மழை பெய்யும் என ‘MET Malaysia’ எனப்படும் மலேசியா வானிலைத்துறை எச்சரித்துள்ளது.

பஹாங்கில் கேமரன் மலை, லிபிஸ், மாரான், பெகான், மற்றும் ரொம்பினில் திங்கட்கிழமை வரை மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடும் மழையின் காரணமாக ஆறுகளுக்கு அருகே தாழ்வான பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை வெள்ள அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என கால்வாய் மற்றும் வடிகால் நீர்ப்பாசனத்துறையும் தெரிவித்துள்ளது.

இன்று முதல் செவ்வாக்கிழமை வரை திரெங்கானு மற்றும் பஹாங்கில் கட்டம் கட்டமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெசுட்டில் செவ்வாக்கிழமை அதிகாலை 2 மணி வரை மழை பெய்யும் என்பதால் சுங்கை பெசுட்டிற்கு அருகே தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் கெமாமனில் சுங்கை கிஜாங் ஆற்றோரப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் என கால்வாய் மற்றும் வடிகால் நீர்ப்பாசனத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!