கோலாலம்பூர், ஏப் 25 – 16 வயது இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியில் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டதை ஜொகூர் போலீஸ் தலைவர் M. Kumar உறுதிப்படுத்தியுள்ளார்.
Pontian போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அந்த இன்ஸ்பெக்டர் நேற்று முன் தினம் ஆறு மணியளவில் Taman Johor Jaya வில் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இரவு மணி 9.21 அளவில் அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 29 வயதுடைய சந்தேகப் பேர்வழி Bandar Seri Alam வட்டாரத்தில் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக குமார் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பில் 2017 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 14 ஆவது விதி உட்பிரிவு (a) வின் கீழ் விசாரணை நடத்தப்பட்டடு வருவதாக அவர் கூறினார். அந்த சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை மற்றும் கசையடி கொடுக்கப்படலாம்.