கோலாலம்பூர், ஏப் 25 – வெளிநாடுகளின் பேச்சாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ரத்துச் செய்யும்படி உயர்க் கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir உத்தரவிட்டுள்ளார். அண்மையில் இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டு கல்வியாளர் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மலாயா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி மேல் விவரங்களை அறிக்கையாக வழங்கும்படி தாம் கேட்டுக்கொண்டிருப்பதாக Zambry Abdul Kadir தெரிவித்தார்.
அதோடு உயர்க் கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்கள் எவரையும் தங்களது நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக அவர்களது பின்னணிகளை மிகவும் கவனமாக ஆராயும்படி அவர் கேட்டுக் கொண்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின் கல்வியாளர் Bruce Gilley யூதர்களுக்கு எதிராக இரண்டாவது படுகொலைக்கு மலேசியா முன்னெடுத்து வருவதாக கூறியிருந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குறைகூறல்கள் எழுந்ததை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் Zambry இதனைத் தெரிவித்தார்.