![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-07-Jun-2024-07-49-PM-2431.jpg)
அலோஸ்டார், ஜூன் 7 -இஸ்ரேலின் Zim அடையாள முத்திரையைக் கொண்ட வெளிநாட்டு பதிவு எண் கொண்ட கொள்கலன் லோரி தடுத்து நிறுத்தப்பட்டதோடு மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பும்படி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கணினி வர்த்தக பொருட்களைக் கொண்ட அந்த கொள்கலன் டிரெய்லர் லோரி புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்க ,தடுப்பு மற்றும் பாதுகாப்பு மைய வளாகத்தின் நுழைவுப் பகுதியின் மூலம் மலேசியாவிற்குள் புகுந்ததாக கெடா சுங்கத்துறையின் அமலாக்க , கண்காணிப் துறைக்கான துணை இயக்குனர் சுஹைய்மி எப்பென்டி ஜைனால் அபிடின் ( Suhaime Affindi Zainol Abidin ) தெரிவித்தார்.
ஜூன் 6ஆம் தேதி நண்பகல் 12. 00 மணிக்கு வெளிநாட்டு பதிவு எண் பட்டையைக் கொண்ட டிரெய்லர் கொள்கலன் லோரி கண்டுப்பிடிக்கப்பட்டு தாய்லாந்திற்கு திரும்ப செல்லும்படி பணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கொள்கலன் லோரி பிற்பகல் மணி 1.30 அளவில் மலேசியாவிலிருந்து வெளியேறி தாய்லாந்திற்கு சென்றதாக அவர் கூறினார்.