ஈப்போ, நவ 15 – பேரா மாநிலத்தில் தயாராகிவரும் யாரும் விஜய் சேதுபதியின் 51 ஆவது திரைப்படத்தின் படபிடிப்பு மீண்டும் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான பூஜை இவ்வாண்டு ஜூன் மாதம் ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதம் இடைவிடாது பேராவில் பல இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் ஒரு மாத காலம் காலம் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழகம் சென்ற விஜய் சேதுபதி படபிடிப்பு குழுவினர் நேற்று மீண்டும் பெர்ச்சாம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் படப்பிடிப்பை நடத்தினர்.
அதோடு நேற்று விஜய் சேதுபதியின் திருமண நாளை முன்னிட்டு ஈப்போ வணிகப் பிரமுகர் டத்தோ அமாலுடின் குடும்பத்தினர்கள் மற்றும் படபிடிப்பு குழுவினர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர். விஜய் சேதுபதி பின்னணி நடிகராகப் பணிபுரிந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறு சிறு துணை வேடங்களில் நடித்தார். பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , சூது கவ்வும் , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி தற்போது பேரா மாநிலத்தில் தயாராகிவரும் தமது 51 ஆவது படம் நல்ல வெற்றியை தேடித் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.