![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-02-Mar-2024-11-45-AM-7221.jpg)
பாரிஸ், மார்ச் 2 – உணவு உதவிப் பொருள் விநியோகத்தின்போது காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்சூடு தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதோடு என்ன நடந்தது என்பது குறித்த சுயேச்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் செஜோர்ன் கேட்டுக் கொண்டார்.
மத்திய கிழக்கு நெருக்கடியில் இரட்டை போக்கை ஏற்கமுடியாது என அவர் கூறினார். காஸாவில் நடத்தப்பட்டுவரும் கொடுமைகளை ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேல் நியாயப்படுத்தி வருவதை எந்தவகையிலும் ஏற்க முடியாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. உணவு உதவிக்காக வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு பாவமும் அறியாத மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒரு போர்க்குற்றமாகும் என பிரான்ஸ் சாடியது.