![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-03-May-2024-01-34-PM-14.jpg)
ஜியோர்ஜ்டவுன், மே-3, 1 கோடியே 16 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்கும் விடுதித் திட்டம் தொடர்பில் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை ரத்துச் செய்யும் முயற்சியில், பினாங்கு முன்னாள் முதல் அமைச்சர் லிம் குவான் எங், அவரின் மனைவி பெட்டி ச்சியூ மற்றும் வர்த்தகரான பாங் லீ கூன் தோல்விக் கண்டனர்.
அவர்களின் விண்ணப்பத்தை ஜியோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவ்வழக்கின் விசாரணைத் தொடரும் என நீதித்துறை ஆணையர் ரொஃபியா மொஹமட் அறிவித்தார்.
வெவ்வேறு நபர்களை உட்படுத்தியதாகக் கூறப்படும் தவறுகளில் அதிக முரண்பாடு இருப்பதால் விசாரணைத் தொடருவதே சிறந்தது என்றார் அவர்.
இதுவரையிலான விசாரணையில் 25 சாட்சிகள் அழைக்கப்பட்ட போதும், ஒரு தெளிவான முடிவுக்கு நீதிமன்றம் வரும் அளவுக்கு அவர்களின் வாக்குமூலம் வலுவானதாக இல்லை.
அதே சமயம், குற்றச்சாட்டைக் கொண்டு வந்த சட்டத்துறைத் தலைவரின் முடிவை எதிர்க்க வேண்டுமென்றால், அது நீதித்துறை சீராய்வு வாயிலாகவே செய்யப்பட வேண்டும்; மாறாக உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் வாயிலாக அல்ல எனக் கூறி, குவான் எங் உள்ளிட்டோரின் மனுவை நீதித்துறை ஆணையர் நிராகரித்தார்.
வழக்கு விசாரணை நிர்வகிப்புக்கான தேதியாக ஜூலை 26 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.